தமிழ்-சிங்களப் புத்தாண்டை ஒட்டி எதிர்வரும் 13,14 ஆம் திகதிகளில் நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உரிமம் பெற்ற ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மையங்கள் தவிர அனைத்து சில்லறை மதுபான விற்பனை நிலையங்களும் 13,14 ஆம் திகதிகளில் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.